இந்தியா

கடத்தியவரை நன்றாக நடத்தினால் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

PTI


புது தில்லி: கடத்திய நபர், அடித்துத் துன்புறுத்தவில்லை, கொன்றுவிடுவேன் என்று மிரட்டவில்லை, கடத்தியவரை நன்றாக நடத்தியதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 364ஏ-வின் கீழ், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தெலங்கானா மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநர், பள்ளிச் சிறுவனை கடத்தி வைத்துக் கொண்டு, அவனது பெற்றோரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஷோக் பூஷண் மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கடத்தல் வழக்கில், மூன்று அடிப்படை விஷயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அதில் ஒன்று ஒரு நபரை கடத்தி வைத்திருப்பது, கொலை செய்து விடுவதாக மிரட்டுவது அல்லது துன்புறுத்துவது, பணத்தைக் கேட்டு மிரட்டி கடத்தியவரை கொல்வது அல்லது காயப்படுத்துவது போன்றவையாகும். 

இந்த மூன்றும் நிரூபிக்கப்பட்டால்தான் ஒரு குற்றவாளிக்கு தூக்கு அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும், இந்த மூன்றில் ஒன்று நிரூபிக்கப்படாவிட்டாலும் 364 ஏ சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT