இந்தியா

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு

DIN

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 
கோவாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,103ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,062ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 2,174 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 285 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,61,867ஆக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். மேலும், கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். சலூன்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகம் / மைதானங்கள் திறக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT