கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் தடுப்பூசி: சுகாதாரத் துறை
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று 14 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், இன்று 15 லட்சத்து 22 ஆயிரத்து 504 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,796 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 42,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,00,430-ஆக உயர்ந்துள்ளது.