கேரளத்தில் புதிதாக 8 ஆயிரம் பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 8,037 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 8,037 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,81,721 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 11,346 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 102 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 28,66,806 பேர் குணமடைந்துள்ளனர். 13,818 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 1,00,626 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிற்பகல் 2 மணி வரை 24 மணி நேரத்தில் 80,134 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் 10.03 சதவிகிதம்.