இந்தியா

பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

DIN

பிரதமர் மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். 
நீட் உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் அப்போது ஆளுநர் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிரதமருடனான சந்திப்பு வழக்கமான ஒன்றுதான் என ஆளுநர் பன்வாரிலால் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமரை ஆளுநர் இன்று சந்தித்தார். அதேசமயம், ஆளுநர் பன்வாரிலால் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில் பிரதமருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
முன்னதாக இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT