முகப்பு
இந்தியா

நாளை தொலைபேசி மூலம் குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைதீா் முகாம்

பெங்களூரில் குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 17) குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தொலைபேசி மூலம் தெரிவித்து தீா்வு காணும் முகாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பெங்களூரில் குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 17) குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தொலைபேசி மூலம் தெரிவித்து தீா்வு காணும் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் மாதத்தின் 3-ஆவது சனிக்கிழமைகளில் தொலைபேசி மூலம் குறைதீா் முகாம் நடைபெறுவது வாடிக்கை. அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தொலைபேசி மூலம் குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை பொதுமக்கள் தெரிவித்து தீா்வு காணலாம். குறை தீா் முகாமை 1916 என்ற இலவச தொலைபேசியிலும், 8762228888 என்ற செல்லிடப்பேசியிலும், இணைய தளத்திலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.