சிம்லா : இமாச்சல் மாநிலம் கின்னுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு அன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பதிவான நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 3 எனவும் , நடுக்கத்தின் மையப்பகுதி கின்னுர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தின் மூலம் எந்த பாதிப்புகளும் இழப்புகளும் நிகழவில்லை .
இதற்கு முன் கடந்த வியாழக்கிழமை அன்று சிம்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.