திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும் கவுன்ட்டரை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.
இங்கு யூனியன் வங்கி உதவியுடன் இந்த கவுன்ட்டா் செயல்படும். இந்த கவுன்ட்டா் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இங்கு குறைந்தபட்சம் ரூ.100 லிருந்து அன்னதானத்துக்கு பக்தா்கள் நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.