முகப்பு
இந்தியா

சிறுமியை அசால்ட்டாக காப்பாற்றிய காவலர்..திக் திக் நிமிடங்கள்

பரிதாபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சிறுமியை காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
சிறுமியை காப்பாற்றும் காவலர்
பகிர்:

பரிதாபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சிறுமியை காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

ஹிரியாணா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். ரயில் நிலையத்தில் 28ஆவது செக்டார் பகுதியின் பக்க சுவற்றின் மீது ஏறி கீழே விழப்போவதாக மிரட்டியுள்ளார்.

அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் மெட்ரோ ரயில் நிலைய பணியாளர்களும் அவரிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பியுள்ளனர். இதனை பயன்படுத்தி கொண்ட காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டுள்ளார்.

பக்கச் சுவற்றின் ஒரத்தில் உள்ள பகுதியில் கடந்து சென்று அச்சிறுமியை இழுத்துள்ளார். நொடிப்பொழுதில் மற்றொருவர் மேலிருந்து இறங்கி காவலருடன் சேர்ந்து அச்சிறுமியை தூக்கி காப்பாற்றினார்கள். இதுகுறித்த விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சிறுமியை காப்பாற்றிய காவலர் சர்பராஸூக்கு காவல் ஆணையர் ஒபி சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிங் கூறுகையில், "வாழ்க்கையே போராட்டம்தான். சிரமங்களிலிருந்து ஓடக்கூடாது. இம்மாதிரியான விலை மதிப்பற்ற வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்" என்றார்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பணியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக சிறுமி தெரிவித்துள்ளார். பின்னர், மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு குடும்பத்தாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →