இந்தியா

மம்தாவுடன் பேசியது என்ன? கனிமொழி ட்வீட்

DIN


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடியதாக திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதன் பகுதியாக கனிமொழியை வியாழக்கிழமை சந்தித்தார் மம்தா பானர்ஜி.

இந்த சந்திப்பு குறித்து கனிமொழி ட்வீட் செய்தது:

"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT