இந்தியா

தொடரும் கரோனா அபாயம்: கேரளாவுக்கு விரையும் மத்தியக் குழு

DIN

கேரளத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு அங்கு செல்லவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும், கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனிடையே, நிலைமையை கண்காணிக்கும் வகையில் ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு அங்கு செல்லவுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான குழு கேரளத்திற்கு வெள்ளிக்கிழமை செல்லவுள்ளது. கரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில், "கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு துணை நிற்கும் நோக்கில் மத்திய குழு செல்லவுள்ளது. மாநில சுகாதார அமைப்புகளுடன் இணைந்து குழு செயல்படும்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

ஓய்வு முடிவை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

SCROLL FOR NEXT