முகப்பு
இந்தியா

இந்திய - சீன எல்லை பிரச்னை: 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை

இந்திய, சீன நாடுகளுக்கிடையேயான 12ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்திய, சீன நாடுகளுக்கிடையேயான 12ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது.

இந்திய, சீன எல்லையான கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் ராணுவ வீரர்களை திரும்ப பெறுவது தொடர்பாக இரு நாட்டு உயர் மட்ட ராணுவ அலுவலர்களுக்கிடையே இன்று (சனிக்கிழமை) 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் ரீதியான பேச்சுவார்த்தை சீன எல்லைப்பகுதியான மோல்டோவில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாங்காங் ஏரி கரையிலிருந்து இரு நாட்டு ராணுவமும் தங்களின் வீரர்களை ஏற்கனவே திரும்பபெற்றது.

கிழக்கு லடாக் பகுதியில் சீனா தாக்குதல் நடத்திய பிறகு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக, அங்கு ராணுவ வீரர்கள் திரும்பபெறுவதில் சிக்கல் நிலவிவருகிறது. 

கடந்த ஓராண்டு காலமாக அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, கடந்த மாதம் சர்ச்சைக்குரிய பாங்காங் ஏரி பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் திரும்பபெறப்பட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →