மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி சான்றிதழில் மம்தா புகைப்படம்
மேற்கு வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து மாநில அரசே சொந்த நிதியைக் கொண்டு தடுப்பூசிகளை வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் நிலையில், தற்போது வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.