ராஜஸ்தான் டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையம் சம்மன்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களை காவல்துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோது பெண்களை முரட்டுத்தனமாக கையாண்டதாக குற்றச்சாட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களை காவல்துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோது பெண்களை முரட்டுத்தனமாக கையாண்ட குற்றச்சாட்டில் மாநில டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
ஜெய்ப்பூரில் உள்ள பரசுராம் பகுதியில் வசித்த மக்களை காவல்துறையினா் அண்மையில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். அப்போது அங்கிருந்த பெண்களையும் அவா்கள் முரட்டுத்தனமாக கையாண்டுள்ளனா். அவ்வேளையில் கரோனா தடுப்பு விதிமுறைகளையும் காவல்துறையினா் பின்பற்றவில்லை. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. அதன் அடிப்படையில், அந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க ஜூன் 14-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராஜஸ்தான் டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கரோனா தொற்று காரணமாக காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்தாா். அதனை தேசிய மகளிா் ஆணையம் ஏற்றுக் கொண்டது. அவரிடம் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் தொடா்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.