கர்நாடகத்தில் புதிதாக 5,983 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் புதிதாக 5,983 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 5,983 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 5,983 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,90,338 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 10,685 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,10,157 பேர் குணமடைந்துள்ளனர்.
138 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 33,434 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,46,726 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதன்கிழமைக்கான தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 3.77 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.30 சதவிகிதம்.