குக் வித் கோமாளி - 7 நிகழ்ச்சியின் புதிய முயற்சி! போட்டியாளர்கள் யார் யார்?
குக் வித் கோமாளி - 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், 7-வது சீசன் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
Advertisement
Advertisement
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் இரவு 9.30 மணிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்ஷன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். இவருடன் இணைந்து கடந்த முறை போட்டியாளராக இருந்த ஜோயாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன், கௌசிக் சங்கர் ஆகியோர் இம்முறையும் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். இவர்களுடன் நடிகை ரோஜா புதிய நடுவராக இணைந்துள்ளார்.
முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் இந்த சீசனிலும் பங்கேற்கவுள்ளனர். மேலும் சிலரும் பங்கேற்கவுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில், குக்குகள் மற்றும் கோமாளிகள் மட்டும் பங்கேற்று வந்த நிலையில், இந்த சீசனில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்கள்(குக்குகள்) கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து தம்பதிகளாகப் பங்கேற்கிறார்கள். அதன்படி, பாடகர் மனோ - ஜமீலா, நடிகர் அரவிந்த் சேஜு - நடிகை சங்கீதா, கானா வினோத் - பாக்கியா, ரியாஸ் - நிஷா, நடிகை சம்யுக்தா - அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இம்முறை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இணையாக பங்கேற்கவுள்ளதால், நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்றும் டிஆர்பி புள்ளிகள் உயரும் என்றும் கூறப்படுகிறது.
Information has emerged regarding the contestants who will be participating in the 7th season of the show *Cooku with Comali*, set to air on Vijay TV.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.