ராஜஸ்தானில் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி: பி.எஸ்.எஃப் வீரர் பலி, நால்வர் காயம் 
இந்தியா

ராஜஸ்தானில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி: பி.எஸ்.எஃப். வீரர் பலி, நால்வர் காயம்

ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

PTI

ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) வீரர்கள் ஐந்து பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. 

இந்நிலையில் 3 பேர் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் போக்ரானில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சதீஷ்குமார் (32) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் குடும்பத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT