முகப்பு
இந்தியா

24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: ஹர்ஷ் வர்தன்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: ஹர்ஷ் வர்தன்
பகிர்:


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் உடல் நலனே பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கியம் என்று குறிப்பிட்டிருக்கும் ஹர்ஷ் வர்தன், இனி பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப, எப்போது வேண்டுமானாலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் வகையில், இதுவரை இருந்த நேரக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இனி நாடு முழுவதும் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் எந்த நேரத்தில் தங்களால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியுமோ, அப்போது சென்று ஊசி போட்டுக் கொள்ளலாம்.

தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இந்த நேரக்கட்டுப்பாட்டை மருத்துவமனைகள் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →