முகப்பு
இந்தியா

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி கருத்து...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 9:59 PM
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தத்தால் விவசாயிகள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பயன் பெறும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 27) தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

''இந்தியா-நியூசிலாந்து இடையிலான கூட்டு உறவில் இன்று ஒரு மைல்கல் தருணம்!

Advertisement

இன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது வளர்ச்சிக் கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் புதுமையாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது வளர்ச்சிக்குப் புதிய வழிகளைத் திறந்து, வாய்ப்புகளை உருவாக்கி, பல்வேறு துறைகளில் நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும்.

நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

summary

India-New Zealand FTA deal Prime Minister Narendra Modi says will greatly benefit farmers, youth, MSMEs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.