முகப்பு
இந்தியா

மம்தா மீது தாக்குதல்: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அறிக்கை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
மம்தா மீது தாக்குதல்: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
பகிர்:

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அறிக்கை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நடைபெற உள்ள மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதன்கிழமை மம்தா வேட்புமனு தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் வழிபட்ட பின் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தள்ளிவிட்டதாக  மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்தார். 

இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் யாரும் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் சம்பவத்தால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமை செயலர் அறிக்கை அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →