கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுப்புகளை ரத்து செய்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பிகாரிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதனால் பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுமுறையை அம்மாநில சுகாதாரத் துறை ரத்து செய்துள்ளது.
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 107 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்க்கை 406-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பிகாரில் 1,555 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 39,726 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டில் பதிவான அதிகப்படியான கரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.