ஆந்திரத்தில் புதிதாக 246 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,92,986 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 131 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 8,83,890 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் பலியானார்.அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,187 பேர் பலியாகியுள்ளனர்.