ரயில்வே உள்கட்டமைப்புகள் தனியார்மயமாக்கப்படாது; ஆனால்: பியூஷ் கோயல்
ரயில்வே உள்கட்டமைப்புகள் தனியார்மயமாக்கப்படாது, ஆனால், ரயில்வேயின் சொத்துகளை, வளர்ச்சிக்கான காரணிகளாக மாற்றும் திட்டம் உள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: ரயில்வே உள்கட்டமைப்புகள் தனியார்மயமாக்கப்படாது, ஆனால், ரயில்வேயின் சொத்துகளை, வளர்ச்சிக்கான காரணிகளாக மாற்றும் திட்டம் உள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பயணிகள் ரயில் போக்குவரத்தை, பொது - தனியார் கூட்டணியில் இணைந்து மேற்கொள்ளவும், அதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடியை முதலீடாக ஈட்டவும் திட்டமுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பியூஷ் கோயல், ஒரு துறையை தனியார்மயமாக்கும் போது, அது முழுவதையும் நிரந்தரமாக விற்றுவிட வேண்டும், அதன்பிறகு, எந்த வகையிலும் அரசின் உரிமை இருக்காது, ஆனால், ரயில்வேயில், அதன் சொத்துக்களை, வளர்ச்சிக்கான காரணிகளகாவும், வளங்களாகவும் மாற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளார்.