முகப்பு
இந்தியா

முகக்கவசம் இல்லையெனில் அபராதம்: கரோனா பரிசோதனையும் கட்டாயம்

ஜம்மு-காஷ்மீரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து கரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:


ஜம்மு-காஷ்மீரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து கரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியேவருவது அதிகரித்து வருவதால், மாவட்ட வளர்ச்சி ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, மக்கள் அனைவரும் முக்கவசம் அணிவதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் இல்லையென்றால் அபராதம் விதிப்பதோடு கட்டாய கரோனா பரிசோதனையும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →