இந்தியா

மும்பை: முகக்கவசத்திற்காக ரூ.4.06 கோடி அபராதம் வசூல்

DIN


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முகக்கவசம் அணியாதோரிடம் வசூலிக்கப்பட்டத் தொகை ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளது.

முகக்கவசம் அணியாமல் சென்ற 2,03,000 பேரிடம் ரூ.4.06 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகமான தொற்று பரவும் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. நாடு முழுவதும் கரோனா அதிகம் உறுதி செய்யப்படும் 10 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மகாராஷ்டிரத்திலேயே உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT