முகப்பு
இந்தியா

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கரோனாவுக்கு பலி

பிகார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்த கேஷவ் மோகன் (40) கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கரோனாவுக்கு பலி
பகிர்:


புது தில்லி: பிகார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்த கேஷவ் மோகன் (40) கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகன், இன்று காலை உயிரிழந்ததாகவும், அவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுவது மற்றும் சஹாரா குழுமம் சார்பிலும், அதன் தலைவர் சுபத்ரா ராய் தரப்பிலும் இவர் ஆஜராகி வந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →