இந்தியாவில் புதிதாக 3.68 லட்சம் பேர் பாதிப்பு: 3,417 பேர் பலி
நாட்டில் புதிய உச்சமாக கரோனா தினசரி பாதிப்பில் புதிதாக 3,68,147 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் புதிய உச்சமாக கரோனா தினசரி பாதிப்பில் புதிதாக 3,68,147 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 3,417 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மொத்தம் 2,18,959 பேர் இறந்துள்ளனர்.
Advertisement
ஒருநாள் பாதிப்பாக 3,68,147 ஆகவும், இதையடுத்து மொத்தம் 1,99,25,604 ஆகவும் உயர்ந்துள்ளது.
நோய் பாதிக்கப்பட்ட 34,13,642 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,00732 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை 15,71,98,207 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 12,10,346 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.