இந்தியா

மாலை 5-க்கு அலுவலர்களுடன் மீண்டும் ஆலோசிக்கிறார் மு.க.ஸ்டாலின்

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அலுவலர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 4) மாலை 5 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். 

நேற்று தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆலோசனையில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன், மருந்து போன்றவை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT