முகப்பு
இந்தியா

மே 23 வரை கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கோவாவில் மே 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
மே 23 வரை கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு
பகிர்:

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கோவாவில் மே 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய அவர், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

மே 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகவும், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் மற்றும் விலக்குகள் குறித்த அறிவிப்புகள் நாளை வெளியாகும் என முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →