நாகாலாந்தில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு
நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மே 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 21-ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மே 5-ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஏழு நாள்களுக்கு மாநில தலைநகர் கோஹிமா மற்றும் வணிக மையமான திமாபூரின் சில பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அரசு அறிவித்தது.
இருப்பினும் தினசரி தொற்று மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.