முகப்பு
இந்தியா

கரோனா எதிரொலி: காஷ்மீரில் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம் 

காஷ்மீரில் கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டமின்றி களையிழந்து காணப்படுகின்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

காஷ்மீரில் கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டமின்றி களையிழந்து காணப்படுகின்றது. 

காஷ்மீரின் முக்கிய மசூதிகள் தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஈத் பிரார்த்தனை செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

உள்ளூர் மசூதிகளில் மக்கள் ஈத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் அதிகாலையில் பல இடங்களில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், பிரார்த்தனைகளை விரைவாக முடிக்கும்படியும் மசூதி நிர்வாகக் குழுக்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டது.

Advertisement

கரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முழுவதுமாக ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கடந்தாண்டு, தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் குறைந்து காணப்பட்டது. அதற்கு முன்னர், 2019ல் ஈத்-உல்-ஆஷா தொழுகையை காஷ்மீரில் வழங்க முடியவில்லை, ஏனெனில் அரசியலமைப்பின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களுக்கு பிரித்ததை அடுத்து அதிகாரிகள் கடுமையான ஊரடங்கு உத்தரவை விதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments