மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 39,923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,923 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,09,215ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று 695 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 79,552ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 53,249 பேர் குணமடைந்தனர் இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47,07,980ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 5,19,254 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 34,82,425 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.