இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 39,923 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 39,923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 39,923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,923 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,09,215ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவால் இன்று 695 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 79,552ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 53,249 பேர் குணமடைந்தனர் இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47,07,980ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 5,19,254 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 34,82,425 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

SCROLL FOR NEXT