முகப்பு
உலகம்

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

சரியான நடுநிலையாளர் அல்ல என்று மத்தியஸ்தம் செய்துவரும் பாகிஸ்தான் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 10:39 AM
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் - ENS
பகிர்:

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் சரியான நடுநிலையாளர் அல்ல என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்பின் விருப்பங்களை நிறைவேற்றவே பாகிஸ்தான் பாடுபடுகிறது, அமெரிக்க விருப்பங்களுக்கு எதிராக பேச மறுக்கிறது என்று பாகிஸ்தான் மீது ஈரான் குற்றம்சாட்டியிருக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான 10 நாள் போா் நிறுத்தம் திங்கள்கிழமையுடன் (ஏப். 27) முடிகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில்தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.