நாகலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
நாகலாந்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் எதரிவித்துள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் எதரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்த தகவலின்படி,
மோகோக்சுங் பகுதியின் கிழக்கே 74 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 81 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் பதிவாகவில்லை.