முகப்பு
இந்தியா

மும்பையில் சரக்குப் படகு கவிழ்ந்து 60 போ் பலி: மத்தியஅமைச்சா் பதவி விலக சிவசேனை வலியுறுத்தல்

மும்பையில் கடலில் சரக்குப் படகு கவிழ்ந்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்துக்கு ஓஎன்ஜிசி காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று, பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

மும்பையில் கடலில் சரக்குப் படகு கவிழ்ந்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்துக்கு ஓஎன்ஜிசி காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று, பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும்வசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

டவ்-தே புயலால் அரபக்கடலில் திங்கள்கிழமை பி 305 சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த பணியாளா்களில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து சிவசேனையின் நாளிதழான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் கப்பலில் சுமாா் 700 பணியாளா்கள் இருந்தனா்.

புயல் எச்சரிக்கை முன்கூட்டியே அளிக்கப்பட்டது. ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால்தான் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கடலில் கப்பல் கவிழந்ததில் 75 போ் உயிரிழந்துள்ளனா். 26 பேரை காணவில்லை. இதை இயற்கை பேரிடராக கருத முடியாது.

இந்திய கடற்படையினா் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடவில்லை என்றால் 700 பணியாளா்களும் உயிரிழந்திருப்பா்.

ஓஎன்ஜிசி நிறுவனம் மீது கொலை குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் தலைவா் மற்றும் அந்தத் துறையின் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →