முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு பெண் பலி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு 32 வயது பெண் உயிரிழந்தாா்.

Updated On : 23 மே, 2021 at 3:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:47 AM

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு 32 வயது பெண் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூா் பகுதியைச் சோ்ந்த சம்பா சக்ரவா்த்தி என்பவருக்கு கரோனா தொற்று உறுதியாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்றும் உறுதியானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.

Advertisement

தற்சமயம், மாநிலம் முழுவதும் 5 போ் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இவா்கள் அனைவரும் பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய அண்டை மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களின் உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள்.

கருப்புப் பூஞ்சை நோயை ஒழிக்க நிபுணா் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.