இந்தியா

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி தயாராகி வருகிறது: கேஜரிவால்

ANI

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி அரசு தயாராகி வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் ஆலையை நேரில் ஆய்வு செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சீனாவிலிருந்து சுமார் 6,000 ஆக்ஸிஜன் உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த ஆக்ஸிஜன் ஆலையின் உற்பத்தித் திறன் 55 மெட்ரிக் டன்கள். இதற்காக சீனாவிலிருந்து சுமார் 6,000 ஆக்ஸிஜன் உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதனைத் தவிர, இந்த கரோனா காலத்தில் வேறு எதுவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

தில்லியில் ஏப்ரல் 19-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT