கரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: கரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ் குறித்து ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறும், இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் ஒரே மாதிரியான கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இருவேறு மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.