முகப்பு
இந்தியா

'யாஸ்' புயல்: 25 ரயில்கள் தற்காலிகமாக ரத்து

யாஸ் புயல் காரணமாக 25 ரயில்களின் சேவையை கிழக்கு ரயில்வே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
'யாஸ்' புயல்: 25 ரயில்கள் தற்காலிகமாக ரத்து
பகிர்:

யாஸ் புயல் காரணமாக 25 ரயில்களின் சேவையை கிழக்கு ரயில்வே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது.

இதன் விளைவாக இன்று (மே 24) முதல் வரும் 29-ம் தேதி வரை ரயில்களின் சேவையை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நியூ தின்சுகியா - தாம்பரம் சிறப்பு ரயில் மே 24-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் - நியூ டின்சுகியா சிறப்பு ரயில் மே 27-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

ஜசிதி (ஜார்கண்ட்) - தாம்பரம் சிறப்பு ரயில் மே 26-ல் ரத்து. தாம்பரம் - ஜசிதி (ஜார்கண்ட்) சிறப்பு ரயில் 29-ம் தேதி ரத்து. 

சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைகுரி சிறப்பு ரயில் மே 26-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. நியூ ஜல்பைகுரி - சென்னை ரயில் மே 28-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →