முகப்பு
இந்தியா

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 10,939: பலி 33

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 10,939: பலி 33
பகிர்:

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் இதுவரை 7,14,380 பேர் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரேநாளில் 33 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,549 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் 4,761 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், மீதமுள்ளவர்கள் உள்ளூரில் கண்டறியப்பட்டுள்ளனர். 

நோய் பாதித்த 1,10,554 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருநாளில் 11,614 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து இதுவரை மொத்தம் 6,01,224 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை 1.14 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.