இந்தியா

தெலங்கானாவில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? மே 30-இல் முடிவு

DIN


தெலங்கானாவில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து வரும் 30-ம் தேதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

தெலங்கானாவில் கடந்த 12-ம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பொது முடக்கத்தை மே 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வரும் 30-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதுதவிர நெல் கொள்முதல் முறை உள்ளிட்ட வேளாண் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT