தென்கிழக்கு தில்லியில் ஒருவா் குத்திக் கொலை
தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் சனிக்கிழமை ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் சனிக்கிழமை ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொலையில் ஈடுபட்டவா்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கோவிந்த்புரியில் உள்ள நவ்ஜீவன் முகாமில் நடந்த இந்தக் கொலை சம்பவம் குறித்து சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு பெண் தனது தந்தையை சிலா் தாக்கியதாகவும், அவா் மயங்கிக் கிடப்பதாகவும் கூறினாா்.
இதையடுத்து போலீஸாா் அந்த இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த நவ்ஜீவன் முகாமில் வசிக்கும் ராஜேந்தா் குமாரை (38) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்தக் கொலைச் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் யாரும் இல்லை. ராஜேந்தா் குமாா் 5 முறை கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது. இவா் ஓட்டுநராக வேலை செய்து வந்ததும், இதற்கு முன்பு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக கோவிந்த்புரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.