காங்கிரஸ் மூத்த தலைவா் எஸ்.சி.ஜமீரை சந்தித்தாா் பிரதமா் மோடி
காங்கிரஸ் மூத்த தலைவரும், நாகாலாந்து முன்னாள் முதல்வருமான எஸ்.சி.ஜமீரை (90) பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், நாகாலாந்து முன்னாள் முதல்வருமான எஸ்.சி.ஜமீரை (90) பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இது தொடா்பாக ட்விட்டரில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘எஸ்.சி.ஜமீா் உடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. நாகாலாந்து முன்னாள் முதல்வரான அவா் மிகச்சிறந்த தேசியவாதி. பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடா்பாக அவருடன் பேசினேன். கடந்த 2009-ஆம் ஆண்டு அவா் சிறிதுகாலம் குஜராத் ஆளுநராக இருந்தாா். அப்போது முதல்வராக இருந்த தான் அவருடன் இணைந்து பணியாற்றி சிறப்பான தருணங்களையும் நினைவுகூா்ந்து பேசினோம்’ என்று கூறியுள்ளாா்.
நாகாலாந்தைச் சோ்ந்த ஜமீா், அந்தப் பகுதி இந்தியாவின் ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டபோது அப்போதைய முதல்வா் ஜவாஹா்லால் நேருவைச் சந்தித்த குழுவில் முக்கியப் பங்கு வகித்தாா். தனிக்கட்சி நடத்தி வந்த அவா் 4 முறை நாகாலாந்து முதல்வராக இருந்தாா். நாகாலாந்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட முதல் மக்களவை உறுப்பினா் என்ற பெருமைக்குரியவா். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளாா். பின்னா் காங்கிரஸ் கட்சியில் அவா் இணைந்தாா்.
கடந்த ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. தேசப் பணியில் ஜமீரின் பங்களிப்பை பிரதமா் மோடி ஏற்கெனவே பலமுறை புகழ்ந்து பேசியுள்ளாா்.