நாட்டில் இதுவரை 108.47 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 116 கோடி(1,16,59,92,955) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 15.6 கோடி(15,60,08,496) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,84,096 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,08,47,23,042 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
| 18 - 44 வயது | முதல் தவணை - 42,45,43,385 இரண்டாம் தவணை - 15,14,76,624 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 17,63,88,452 இரண்டாம் தவணை - 9,93,34,705 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,06,32,907 இரண்டாம் தவணை - 6,82,87,034 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,79,606 இரண்டாம் தவணை - 1,60,37,946 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,72,723 இரண்டாம் தவணை - 1,48,10,221 |
| மொத்தம் | 1,08,47,23,042 |