முகப்பு
இந்தியா

உ.பி. வன்முறை: பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியா

உ.பி. வன்முறை: பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 
உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். துணை முதல்வா் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினா் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கிகல்வீச்சு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. 

இதில் வாகன வரிசையில் இறுதியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரா்கள் மீது மோதிக் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் காரை சிறைபிடித்து, தீ வைத்தனா். காரில் பயணித்த சிலரை அவா்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இந்தச்சம்பவத்தில் காரில் பயணித்த பாஜகவினா் 4 போ், விவசாயிகள் 4 போ் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். 
இந்த சம்பவத்துக்குப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் நேற்றைய மோதலில் காயமடைந்த பத்திரிகையாளர் ராமன் காய்சியப் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →