இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நெரிசல்: கேள்விக்குறியான சமூக இடைவெளி

நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பை விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடியதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

DIN

நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பை விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடியதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

9 நாள்களுக்கான நவராத்திரி கொண்டாட்டம் நேற்று முதல் தொடங்கியது. விழாவில் 9-ம் நாள் விஜய தசமி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

கூட்ட நெரிசலால் பலர் விமானங்களை தவறவிடும் நிலை ஏற்பட்டது. விமான நிலைய பாதுகாவலர்களும் பயணிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விமான நிலையத்தில் பாதுகாவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் கரோனா பரவலை மறந்து ஏராளமான மக்கள் ஓரிடத்தில் கூடியதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களிலேயே இவ்வாறு விழிப்புணர்வை மறந்து செயல்படுவது அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT