இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நெரிசல்: கேள்விக்குறியான சமூக இடைவெளி

நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பை விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடியதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

DIN

நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பை விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடியதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

9 நாள்களுக்கான நவராத்திரி கொண்டாட்டம் நேற்று முதல் தொடங்கியது. விழாவில் 9-ம் நாள் விஜய தசமி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

கூட்ட நெரிசலால் பலர் விமானங்களை தவறவிடும் நிலை ஏற்பட்டது. விமான நிலைய பாதுகாவலர்களும் பயணிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விமான நிலையத்தில் பாதுகாவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் கரோனா பரவலை மறந்து ஏராளமான மக்கள் ஓரிடத்தில் கூடியதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களிலேயே இவ்வாறு விழிப்புணர்வை மறந்து செயல்படுவது அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

SCROLL FOR NEXT