இந்தியா

காஷ்மீர்: தீவிரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

DIN

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளநிலை ஆய்வாளரும் ராணுவ வீரரும் பலியாகியிருக்கிறார்கள்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நார்காஸ் வனப்பகுதியில் நேற்று(அக்-14) தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்த பின் ராணுவ சிறப்பு படையினரும் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இன்று அவர்கள் இருவரும் உயிரிழந்திருப்பதாக ராணுவத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் இறந்தவர்களில் ஒருவர் ராணுவ இளநிலை ஆய்வாளர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT