சோனியா காந்தி(கோப்புப்படம்) 
இந்தியா

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

தில்லயில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. 

DIN

தில்லயில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. 

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.தமிழகம் சார்பில் மாணிக்கம் தாகூர், பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 

மேலும் வரவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா பரவிய பின் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொலியில் இல்லாமல் முதல்முறையாக நேரடியாக கூடியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததால் 2019ஆகஸ்ட் மாதம் தற்காலிக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT