முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி உற்பத்தி மேம்பாடு: அமெரிக்க அதிகாரி இந்தியா வருகை

 இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அமெரிக்காவின் சா்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் (டிஎஃப்சி) தலைவா் இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

 இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அமெரிக்காவின் சா்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் (டிஎஃப்சி) தலைவா் இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உலக அளவில் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை மேம்படுத்த, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் திட்டமிட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் டிஎஃப்சி அமைப்பின் தலைவா் டேவிட் மாா்சிக் தலைமையிலான குழு வரும் 24 முதல் 26-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

அந்தச் சுற்றுப் பயணத்தின்போது, ஹைதராபாதிலுள்ள இந்திய தடுப்பு மருந்துகள் உற்பத்தியாளரான ‘பயோலாஜிகல் இ’ நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அந்தக் குழு பாா்வையிடும்.

அந்தக் குழுவில், டிஎஃப்சி கடன் பிரிவு துணைத் தலைவா் ஜிம் போலன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இடம் பெறுவாா்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசுக்குச் சொந்தமான டிஎஃப்சி, வளரும் நாடுகளில் உரிய திட்டங்களுக்காகக் கடனுதவி அளித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →