நாட்டில் இதுவரை 103.53 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று முதல் (அக்.27) கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 55.89 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 107.81 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 12.37 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இதில் வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.